பாமயன் – சிறந்த வேளாண் பங்களிப்பிற்கான உழவர் விருது
உலகில் தோன்றிய புது புது மாற்றங்கள், புதுபுது கண்டுபிடிப்புகள் , புது புது சிந்தனைகள் என அனைத்திற்குப் பின்னாலும் இருப்பது தன்னலமற்ற தனிநபர்களின் உழைப்பு மட்டுமே. . அந்த வரிசையில் 35 ஆண்டுகளாக தன் வாழ்வையே உழவுக்காக அற்பணித்தவர் தான் மதுரையை சேர்ந்த “பாமயன் என்கின்ற பாலசுப்பிரமணியன் . . . முதுநிலை படிப்பு முடித்து பத்திரிகை துறையில் பணியாற்றியபோதும் அவர் மனம்முழுதும் சமூகத்தின் மீதே இருந்தது. . . நவீன விவசாயம் பசி பட்டினியை போக்கியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் பக்கவிளைவுகள் எதிர்கால விவசாயத்தையும், மனித சமூகத்தையும் பெரும் சிக்கலில் கொண்டு சேர்க்குமோ என்ற அச்சம் பாமயன் அவர்களை உழவை நோக்கி சிந்திக்க தூண்டியது. ஜப்பானில் நஞ்சில்லா உழவில் புரட்சி செய்த ஒற்றை வைக்கோல் புரட்சி நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இயற்கை...











































