உழவர் விருதுகள் – 2019
-1
archive,category,category---2019,category-29,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2019 / 15.01.2019

நாகை மாவட்டதைச் சார்ந்த இளைஞர் அசோக்குமார் சிறந்த விவசாயக் கருவிகள்  வடிவமைப்பிற்காக விருதை பெற்றார். இவர் துளு உரங்கள் தயாரிக்கும் இயந்திரம், கீரைகள் மற்றும் கடலை  நடுவதற்கான இயந்திரம் போன்ற பல சிறு குறு விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளை உருவாக்கியுள்ளார். அடிப்படையில் ஐ.டி.ஐ    டீசல் மெக்கானிக்கல் படித்தவர் . 2011 ஆம் ஆண்டிலிருந்து  தற்சார்பு விவசாயம் மேற்கொண்டு வருகிறார். ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2019 / 15.01.2019

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயி சொக்கலிங்கம் அவர்களுக்கு சிறந்த மண் நலத்திற்காகவும், சிறந்த மகசூலுக்காகவும் விருது வழங்கப்பட்டது. 40 வருடங்களாக விவசாயம் செய்து வரும் இவர் கடந்த 20 வருடங்களாக இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் பயிர் செய்து வருவதோடு நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவருடைய மண் 50 வருடங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் இருந்த மண்ணின் தன்மையை ஒட்டி இருப்பதாக வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2019 / 15.01.2019

மயிலாடுதுறையைச் சார்ந்த விவசாயி சேதுராமன்  அவர்கள்  அரசாங்கப் பணியை துறந்துவிட்டு தற்சார்பு விவசாயம் செய்து வருபவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு இணைந்து பல களப்பணிகளை செய்தவர். முதல் இயற்கை வேளாண் மாநாட்டை ஒருங்கிணைத்தவர். இவர் 25 வருடங்களுக்கும் மேலாக விவசாயத்திற்கு ஆற்றியப்  பங்களிப்பை பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2019 / 15.01.2019

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சார்ந்த விவசாயி தெய்வமணி அவர்கள், தன்னிடம் உள்ள குறைவான நிலத்தில் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கி மற்றவ விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் . கஜா புயலால் இவருடைய வாழ்வாதாரங்கள் முழுவதும் பறிபோனது. இவருடைய பண்ணை சீறு அமைப்பிற்காகவும்,அவரின் வெற்றிகரமானா  ஒருங்கிணைந்தப் பண்ணையை பாராட்டியும் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2019 / 15.01.2019

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயி சீனிவாசன் அவர்கள் கஜா புயலின் போது எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி தென்னை மரங்களை புயலிலிருந்து காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டை, தேங்காய் , இளநீர் போன்றவைகளை வெட்டித் தன்னுடைய 200  தென்னை மரங்களை அழிவிலிருந்துக் காப்பாற்றியவர். இவருடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப்  பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ...