ஊட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் அரவிந்தன் இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி விவசாயத்தை நேசித்து செய்து வருகின்றனர். கடுங்குளிர், மழை போன்றவற்றைகளைப் பொருட்படுத்தாமல் காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்கள் . இராசயனப் பயன்பாடின்றி விளைப்பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலமாக கிடைக்கச் செய்யும் முயற்சியில் உள்ளார்கள். இவர்களுடைய தன்னம்பிக்கையையும் விவசாயத்தின் மீது வைத்துள்ள பற்றையும் பாராட்டி இவர்கள் முயற்சியை செயல்படுத்தும் நோக்கில் இவர்களுக்கு உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...