5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-7,page-paged-7,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 55 வயதான மனோன்மணி, 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 20 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். தனி ஒருவராக இராசயன பயன்பாடின்றி விவசாயம் செய்ததோடு 150 க்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்சார்பு வேளாண்மை நோக்கி வரவழைத்துள்ளார். தற்சார்பு வேளாண்மைக்காக இவர் செய்யும் பங்களிப்பை பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00, 000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

நாகப்பட்டின மாவட்டம் சீர்காழி வட்டத்தைச் சேர்ந்தவர் ஞானவள்ளி. விவசாயக் கூலிகளான இவரும் இவரது கணவரும் இணைந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாட கடன் பிரச்சனை வாட்ட இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். தங்களை விவசாயம் கைவிட்டதே என்று நினைக்காமல் அதே விவசாயத்தில் தன் மக்களை படிக்க வைக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்.. இவருடைய நம்பிக்கையைப் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலைய வழங்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நாகர் கூடல் என்ற கிராமத்தில் மாற்றத்திற்கான பள்ளியாக புவிதம் என்ற பள்ளியை நடத்தி வருபவர் புவிதம் மீனாட்சி. இந்தப் பள்ளியில் வேளாண்மை என்பது முக்கியமான பாடம். இங்குள்ள குழந்தைகளுக்கு விவசாயத்தின் அவசியத்தை உணர்த்துவதோடு தங்கள் உணவிற்கு தேவையான பொருட்களைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள். எதிர்காலத் தலைமுறையினருக்கு வேளாண்மையின் அவசியத்தை கற்பித்துக் கொண்டிருக்கும் இவரையும் இவருடைய அறக்கட்டளையும் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...