5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-7,page-paged-7,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-18.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-6.0.2,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் சோலார் சீடர், சிறு தானியங்கள் உமி நீக்கும் இயந்திரம், எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்க சிறிய மரச்செக்கு போன்றவற்றை வடிவமைத்துள்ளார்.. இவருடைய கண்டுபிடிப்புகள் சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் சிறப்பு பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், இவருக்கு உழவர் விருதும் சிறப்பு பரிசாக ரூபாய் 25,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

ஈரோடு மாவட்டம் கொங்கு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களான கோகுல்ராஜா மற்றும் நண்பர்கள் தானியங்கி மஞ்சள் நடவு செய்யும் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த கருவியை தானியங்கியாகவும் மனித ஆற்றல் வழியாகவும் பயன்படுத்தலாம்.. சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் இவர்களுடைய "தானியங்கி மஞ்சள் நடவு செய்யும் இயந்திரம்" மூன்றாம் பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு உழவர் விருதும் மற்றும் ரூபாய் 25,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை வட்டம், பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜா. 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளை கண்டுபிடிப்பதில் வல்லவர். மழை நீர் சேகரிப்பு தொழில்நுட்பம், கடலை பறிக்கும் இயந்திரம், சிறிய உழவு ஓட்டும் இயந்திரம், காட்டு விலங்குகளை விரட்டும் கருவி போன்ற பல கருவிகளை வடிவமைத்துள்ளார். சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் இரண்டாம் பரிசாக இவருடைய "ஆழ்துளை கிணற்றிலிருந்து தானியங்கியாக கிணற்றில் நீர் நிரப்பும் நுட்பம்" இரண்டாம் பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 25 ஆயிரத்திற்க்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...