5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-8,page-paged-8,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் விவசாயி பிரபு. சிறுவயதில் மரத்தின் மீதேறி கீழே விழுந்ததில் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை பறிபோயிற்று. ஆனால் அதைப்பற்றி கவலை கொண்டு முடங்காமல், தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கரிலும் குத்தகைக்கு எடுத்துள்ள இருபது ஏக்கர் நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார். பார்வை சவால் உள்ள நிலையிலும் விவசாயத்தை நேசித்து விவசாயம் செய்துவருபவரான இவருடையை தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் ஊக்கத்தொகை ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

ஊட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் அரவிந்தன் இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி விவசாயத்தை நேசித்து செய்து வருகின்றனர். கடுங்குளிர், மழை போன்றவற்றைகளைப் பொருட்படுத்தாமல் காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்கள் . இராசயனப் பயன்பாடின்றி விளைப்பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலமாக கிடைக்கச் செய்யும் முயற்சியில் உள்ளார்கள். இவர்களுடைய தன்னம்பிக்கையையும் விவசாயத்தின் மீது வைத்துள்ள பற்றையும் பாராட்டி இவர்கள் முயற்சியை செயல்படுத்தும் நோக்கில் இவர்களுக்கு உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் சோலார் சீடர், சிறு தானியங்கள் உமி நீக்கும் இயந்திரம், எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்க சிறிய மரச்செக்கு போன்றவற்றை வடிவமைத்துள்ளார்.. இவருடைய கண்டுபிடிப்புகள் சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் சிறப்பு பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், இவருக்கு உழவர் விருதும் சிறப்பு பரிசாக ரூபாய் 25,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...