5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-4,page-paged-4,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-18.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-6.0.2,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

நம் சந்தை - சிறந்த வேளாண் கூட்டுறவு பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கோத்தகிரி சண்முகநாதன்  உருவாக்கியுள்ள நம்ம ஊரு சந்தை தேசத்துக்கே முன்னுதாரணமாகியிருக்கிறது. மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்து இருளர்கள் சேகரித்துவரும் தேனையும், இரவு பகல் பாராமல் குறும்பர்கள் வரைந்துதரும் ஓவியங்களையும் மலிவாக வாங்கி கொள்ளை விலைக்கு விற்று பணம் பார்த்தார்கள் பலர். இதைக்கண்டு வருந்திய  சண்முகநாதன் இரண்டாண்டுகள் அந்த மக்களோடு பழகி அவர்கள் சேகரித்துத்தரும் பொருள்களின் மகத்துவத்தை உணர வைத்தார். அந்த மக்களே விலைவைத்து விற்கும் வகையில் 'நம்ம ஊரு சந்தை' என்ற சொசைட்டியை உருவாக்கினார்.  குறும்பர், கோத்தர், இருளர், ஆதிதிராவிடர்கள் மற்றும் நில உடமை மறுக்கப்பட்ட தாயகம் திரும்பியவர்கள் நம்ம ஊரு சந்தையின் அங்கத்தினராக்கப்பட்டார்கள். இசைக்கருவிகள், ஓவியங்களென உற்பத்திக்கும் விற்பனைக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து வரையறுக்கப்பட்ட நிறுவனம் போல செயல்படுகிறது...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

சங்கனாப்பேரி களஞ்சியம் விவசாயப் பெண்கள் கூட்டமைப்பு (தென்காசி) - -சிறந்த பெண் விவசாயிகள் கூட்டமைப்பு முற்றிலும் வேளாண்மை பொய்த்துப்போன நிலத்தின் பச்சையத்தை மீட்டு பலநூறு குடும்பங்களுக்கு நம்பிக்கையளித்திருக்கிறது களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயிருக்கும் சங்கானப்பேரி வானம் பார்த்த பூமி...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 06.08.2020

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கடந்த பத்தாண்டுகளுகாக எந்த வித இராசயன பயன்பாடுமின்றி விளைப்பொருட்களை உற்பத்தி செய்வதோடு அவைகளை மதிப்புகூட்டி சமூக வலைத்தளங்களின் வழியாக யாருடைய உதவியிமின்றி விற்பனையும் செய்து வருகிறார். இவருடைய நேரடி விற்பனை முறையைப் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.. ...