5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-6,page-paged-6,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-18.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-6.0.2,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நாகர் கூடல் என்ற கிராமத்தில் மாற்றத்திற்கான பள்ளியாக புவிதம் என்ற பள்ளியை நடத்தி வருபவர் புவிதம் மீனாட்சி. இந்தப் பள்ளியில் வேளாண்மை என்பது முக்கியமான பாடம். இங்குள்ள குழந்தைகளுக்கு விவசாயத்தின் அவசியத்தை உணர்த்துவதோடு தங்கள் உணவிற்கு தேவையான பொருட்களைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள். எதிர்காலத் தலைமுறையினருக்கு வேளாண்மையின் அவசியத்தை கற்பித்துக் கொண்டிருக்கும் இவரையும் இவருடைய அறக்கட்டளையும் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் விவசாயி பிரபு. சிறுவயதில் மரத்தின் மீதேறி கீழே விழுந்ததில் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை பறிபோயிற்று. ஆனால் அதைப்பற்றி கவலை கொண்டு முடங்காமல், தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கரிலும் குத்தகைக்கு எடுத்துள்ள இருபது ஏக்கர் நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார். பார்வை சவால் உள்ள நிலையிலும் விவசாயத்தை நேசித்து விவசாயம் செய்துவருபவரான இவருடையை தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் ஊக்கத்தொகை ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

ஊட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் அரவிந்தன் இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி விவசாயத்தை நேசித்து செய்து வருகின்றனர். கடுங்குளிர், மழை போன்றவற்றைகளைப் பொருட்படுத்தாமல் காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்கள் . இராசயனப் பயன்பாடின்றி விளைப்பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலமாக கிடைக்கச் செய்யும் முயற்சியில் உள்ளார்கள். இவர்களுடைய தன்னம்பிக்கையையும் விவசாயத்தின் மீது வைத்துள்ள பற்றையும் பாராட்டி இவர்கள் முயற்சியை செயல்படுத்தும் நோக்கில் இவர்களுக்கு உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...