5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-5,page-paged-5,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-18.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-6.0.2,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பொறியியல் பட்டதாரி ஜனகன். இவர் சிறுதானியங்களின் நன்மைகளை அறிந்து அதைப் பரவலாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தான் சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த பணியை விட்டு விலகி சிறுதானியங்களை தேடி பயணப்பட்டவர். இவர் இதுவரை 53 வகையான சிறுதானியங்களை சேமித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். அதில் சோளம் 23 வகை, தினை 11வகை, கேழ்வரகு 8 வகை, குதிரைவாலி 2 வகை மற்றும் சாமை 6 வகை. இவருடைய பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பை பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 55 வயதான மனோன்மணி, 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 20 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். தனி ஒருவராக இராசயன பயன்பாடின்றி விவசாயம் செய்ததோடு 150 க்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்சார்பு வேளாண்மை நோக்கி வரவழைத்துள்ளார். தற்சார்பு வேளாண்மைக்காக இவர் செய்யும் பங்களிப்பை பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00, 000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

நாகப்பட்டின மாவட்டம் சீர்காழி வட்டத்தைச் சேர்ந்தவர் ஞானவள்ளி. விவசாயக் கூலிகளான இவரும் இவரது கணவரும் இணைந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாட கடன் பிரச்சனை வாட்ட இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். தங்களை விவசாயம் கைவிட்டதே என்று நினைக்காமல் அதே விவசாயத்தில் தன் மக்களை படிக்க வைக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்.. இவருடைய நம்பிக்கையைப் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலைய வழங்கப்பட்டது. ...