நாகப்பட்டின மாவட்டம் சீர்காழி வட்டத்தைச் சேர்ந்தவர் ஞானவள்ளி. விவசாயக் கூலிகளான இவரும் இவரது கணவரும் இணைந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாட கடன் பிரச்சனை வாட்ட இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். தங்களை விவசாயம் கைவிட்டதே என்று நினைக்காமல் அதே விவசாயத்தில் தன் மக்களை படிக்க வைக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்.. இவருடைய நம்பிக்கையைப் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலைய வழங்கப்பட்டது. ...