5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-2,page-paged-2,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

சொந்த நில உரிமை மறுக்கப்பட்டவர்கள் பெண்கள், இரவு பகல் பாராமல் நிலத்தில் உழைத்தாலும் விவசாயி என்ற பெயர் ஆண்களுக்கே கிடைக்கிறது. இப்படிபட்ட சூழ்நிலையில் நிலமற்ற பெண்களில் நிலை சொல்லவே தேவை இல்லை. காலம் காலமாக நிலமற்ற சமூகமாக விவசாயக் கூலிகளாக பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர். அப்படி ஒரு நிலையை தங்கள் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் உழைப்பின் மூலம் மாற்றியமைத்துள்ளனர் பள்ளூர் கிராமப் பெண்கள். பள்ளூர் நிலமற்ற விவசாயப் பெண்கள் சங்கத்தில் மொத்தம் 80 பெண்கள் உள்ளனர். இவர்கள் பிரதான தொழில் கூலி வேலை மட்டுமே. இந்நிலையில் கிராமத்தில் ஆக்கிரமித்து தரிசாக இருந்த நிலத்தை TamilNadu women's Farmers Front Right என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் கண்டறிந்து பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு பெற்றுள்ளனர். காலம் காலமாக அடுத்தவர்கள் நிலத்தில் கூலியாக இருந்தப் பெண்களுக்கு தங்களுக்காக கிடைத்த...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

51 வயதான முன்னாள் இராணுவ வீரர் வெங்கடேஷ் . இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு தமிழ்நாடு அரசு பணியில் இணைகிறார், மின்சார வாரியம், திருச்சி பெல், வருவாய்த்துறை இப்படி பல துறைகளில் பணிபுரிகிறார். 2013 ஆம் ஆண்டு மதுரை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சூப்பர்வைசராக பணியில் சேர்கிறார்.. ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் நல்ல முறையில் இயங்கி வருகிறது… ஆனால் தென் தமிழகத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் சரிவர இயங்கவில்லை.. காரணம் விவசாயிகள் தங்கள் பொருட்களை கொண்டு வருவதில்லை, உடனடி பணத் தேவையின் பொருட்டு வியாபாரியிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொள்வது இப்படி நடைமுறைப் பிரச்சினைகள் இருந்துள்ளது.. இதை எல்லாம் சரி செய்ய 10 வருடங்களுக்கு முன்பே ஆட்டோ எடுத்துக் கொண்டு ஊர் ஊராக, கிராமம்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 02.02.2023

இளம் தலைமுறை பொழுதுபோக்கும் சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி நம்பிக்கையை விதைக்கிறார் சிவகாசி மாவட்டம் பூவாகபுரம் என்னும் சின்ன கிராமத்தில் பிறந்த தினேஷ்குமார். வேளாண்மையை வெற்றிகரமாக செய்யும் விவசாயிகளையும் தொழில்நுட்பங்களையும் 'நவீன உழவன்' என்ற யூடியூப் சேனல் மூலம் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லும் இந்த எம்பிஏ பட்டதாரி, ஒரு தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்கிறார். தன் பயணங்களில் கண்டறியும் வித்தியாசமான விவசாயிகளையும் வியப்பான தொழில்நுட்பங்களையும், பொதுவெளிக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் ஒரு முகநூல் பக்கத்தைத்தொடங்கியதில் தொடங்குகிறது இவரது வெற்றிப்பயணம். தன் உற்பத்தியை தானே மதிப்பூட்டி கூடுதல் லாபம் பார்க்கும் விவசாயிகள், ஒருங்கிணைந்த வேளாண்மை மூலம் பெரும் லாபம் ஈட்டும் விவசாயிகள், புதுப்புது தொழில்நுட்பங்களைக் கையாளும் விவசாயிகள், மாறுபட்ட பயிர்களை பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளென சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கும் விவசாயப்...