5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-2,page-paged-2,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-18.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-6.0.2,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 01.02.2023

திருமிகு. வானகம் ரமேஷ் - சிறந்த வேளாண் பங்களிப்புயில் சிறந்த பங்களிப்பு தமிழ்நாட்டின் மத்தியில் இயற்கை வேளாண் சார்ந்த பயிற்சிகளுக்காகவும் பரிசோதனைக்காகவும் ஒரு மாபெரும் பண்ணையை உருவாக்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் சிந்தனையின் மூலம் 2009 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் கடவூரில் உருவாக்கப்பட்டது வானகம்.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசாக, கருங்கல் பாறைகள் பொதிந்து கால்நடைகள் மேய்க்ககூட பயன்படாத கட்டுத்தரையாக கிடந்த அந்த நிலத்தை சீர்படுத்தி குளங்கள் வெட்டி, நெல், வாழை, மஞ்சள், காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், வெங்காயம். மரவள்ளி கிழங்கு என முப்போகம் விளையும் பூமியாகவும் பசுமை போர்த்திய வனமாகவும் காட்சியளிக்க பெரும் பங்காற்றியுள்ளவர் வானகம் ரமேஷ்.. வானகத்தின் முதல் தன்னார்வலராக தன்னை இணைத்துக் கொண்டவர் இன்று அறங்காவலர், பொருளாளர் என வானகத்தின் செயல்திட்டங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்புகளை கவனித்து...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 01.02.2023

திருமிகு.வெற்றிவேல், உழவர் பூமி  - கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த வெற்றிவேல், ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தில் இருந்து மேலெழுந்து வந்தவர். பள்ளிக்காலத்திலேயே அப்பாவை இழந்து, பெரும்  வறுமையில் கூலி வேலை செய்த  அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர். காலை கல்லூரி   இரவு முழுவதும் கிடைத்த வேலைகள் என  கடும் சிரமங்களுக்கு மத்தியில்  பட்டப்படிப்பு முடித்து ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இணைந்த வெற்றிவேலை,  நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புத்தரும் ஒரு பசுமைத் தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது காலம். படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் பொருளீட்ட வேண்டும் என்ற கனவோடு இருந்தவரின் வாழ்க்கையை மாற்றியது, 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தன் வெளிநாட்டு கனவை கைவிட்டு இம்மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் தன்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

நம் அனுமன் நதி  சீரமைப்பு குழு - நீர் நிலைகளை மீட்டெடுத்தல் 30 ஆண்டுகாலம் தண்ணீரையே பார்க்காத ஒரு நதியை மீட்டு உயிர் தந்திருக்கிறது மக்களின் ஒற்றுமை. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி  32 கிலோ மீட்டர் நீளத்துக்கு 11 கிராமங்களின் உயிர் நனைத்து ஒடி  மன்னார் வளைகுடாவில் கலக்கிறது அனுமன் நதி.  இருதிசைகளிலும் 400 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் மூழ்கி சுருங்கி பொழிவிழந்து போனது இந்த நதி. மரணித்து வரும் நதியை மீட்க  ஜாதி, மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு கரம் கோர்த்தார்கள் 11 கிராமங்களின் தன்னார்வலர்கள். கொரோனாவினால் ஊரே முடங்கிக் கிடந்த நேரத்தில் தொடங்கியது பணி. அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர். சக்திநாதன் வழிகாட்ட,  மாவட்ட நிர்வாகம் தோள் கொடுக்க இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள். DGPS...