5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-4,page-paged-4,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

உழவர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது கால்நடை வளர்ப்பு… அவர்கள் நொடிந்து ஒடிந்துவிடாத படி, தாங்கிப் பிடிக்கும் உயிருள்ள ஊன்றுகோல்கள் தான் ஆடு மாடு கோழிகள். பட்டி ஆடுகளும் பால் கறவை மாடுகளும் தான் இன்று பல உழவர் குடும்பங்களை பசியாற செய்து கொண்டுள்ளன. கால்நடைகளுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த உழவர் குடும்பமே நொடிந்து போகும். அப்படிப்பட்ட சூழலில் அலைக்கும் அபயகுரல்களுக்கு இரவு பகல் பாராமல் ஓடி வந்து மருத்துவ உதவி செய்து உழவருக்கு உறுதுணையாய் இருந்து வருபர் தான் கால்நடை மருத்துவர் விஜயகுமார். 35 வருடகால மருத்துவப்பணியில் அவர் தனது குடும்பத்தோடு செலவிட்ட நேரத்தை விட கால்நடைகளோடு செலவிட்ட நேரேமே அதிகம். காட்சிக்கு எளியவர், கடும் செல்லை தவிர்ப்பவர் , இல்லாதவருக்கு இயன்றதை செய்யும் ஈகை குணத்தவர் என அவரை 30 வருடங்கள் அருகில்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

வால்பாறை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் வாழும் ஒரு பழங்குடி சமூகம் காடர் சமூகம். அங்கு மொத்தம் 25 குடும்பங்கள் வாழ்கிறது… மிளகு, இஞ்சி போன்றவற்றை பயிரிடுவதோடு காடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் பொருட்களையும் வால்பாறையில் விற்பனை செய்து வந்தனர். 2019 ஆம் ஆண்டு இயற்கை சீற்றத்தால் இந்த 25 குடும்பங்கள் வாழ்ந்த மொத்த கிராமமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. புதியதாக இடம் கொடுக்க வனத்துறை சட்டம் வழிவகை செய்யாத போது அறவழியில் மக்களை ஒன்று திரட்டி போராடி, அரசாங்கத்துடன் இணைந்து 12 ஏக்கர் பரப்பளவில் புதிய கிராமத்தை உருவாக்கி கொடுத்தவர் காடர் சமூகத்தை சார்ந்த படிப்பறிவற்ற ராஜலட்சுமி என்ற 35 வயதுப் பெண்… இவருக்கு கையெழுத்து போடத் தெரியும் அவ்வளவுதான். புதியதாக உருவாக்கப்பட்ட கிராமத்திற்கு அம் மக்களை கொண்டே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தியதோடு செங்கல்,...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

அடிப்படையில் விலங்கியல் இளநிலை பட்டப் படிப்பை முடித்தவர் அபர்ணா கார்த்திகேயன். கணவர் வேலையின் பொருட்டு பல ஊர்களில் தங்கியிருந்தவர் 2013 ஆம் ஆண்டு நிரந்தரமாகச் சென்னையில் குடியேறினார். சென்னை வந்தப் பிறகு, தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் சென்னையில் இருக்கும் சராசரி மக்களின் (ஆட்டோ ஓட்டுநர், பீச்சில் ரங்கராட்டினம் சுற்றுபவர், பஜ்ஜி சுடும் அம்மா) வாழ்கைகளைப் பற்றி எழுதத் துவங்கினார். இந்நிலையில் விவசாயிகளின் பிரச்சனையைப் பற்றியும் அவர்களின் தற்கொலை பற்றியும் தொடர்ந்து எழுதிவரும் சாய்நாத் அவர்கள் எழுதிய பெண் விவசாயி பற்றிய ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு அவருக்கு ஒரு ரசிகையாக மின்னஞ்சல் அனுப்பினார். விவசாயிகள் என்றாலே ஆண்கள், வயதானவர்கள் தான், அவர்கள் டிராக்டர் ஓட்டுவார்கள் என்பன போன்ற பொது சிந்தனை உள்ளபோது அதை முழுக்க முழுக்க உடைத்து பெண்கள்தான் விவசாயித்தில் 90% என சாய்நாத் எழுதியது இவருக்கு விவசாயம்...