உழவர் விருதுகள்
-1
archive,category,category-1,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

வால்பாறை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் வாழும் ஒரு பழங்குடி சமூகம் காடர் சமூகம். அங்கு மொத்தம் 25 குடும்பங்கள் வாழ்கிறது… மிளகு, இஞ்சி போன்றவற்றை பயிரிடுவதோடு காடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் பொருட்களையும் வால்பாறையில் விற்பனை செய்து வந்தனர். 2019 ஆம் ஆண்டு இயற்கை சீற்றத்தால் இந்த 25 குடும்பங்கள் வாழ்ந்த மொத்த கிராமமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. புதியதாக இடம் கொடுக்க வனத்துறை சட்டம் வழிவகை செய்யாத போது அறவழியில் மக்களை ஒன்று திரட்டி போராடி, அரசாங்கத்துடன் இணைந்து 12 ஏக்கர் பரப்பளவில் புதிய கிராமத்தை உருவாக்கி கொடுத்தவர் காடர் சமூகத்தை சார்ந்த படிப்பறிவற்ற ராஜலட்சுமி என்ற 35 வயதுப் பெண்… இவருக்கு கையெழுத்து போடத் தெரியும் அவ்வளவுதான். புதியதாக உருவாக்கப்பட்ட கிராமத்திற்கு அம் மக்களை கொண்டே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தியதோடு செங்கல்,...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

அடிப்படையில் விலங்கியல் இளநிலை பட்டப் படிப்பை முடித்தவர் அபர்ணா கார்த்திகேயன். கணவர் வேலையின் பொருட்டு பல ஊர்களில் தங்கியிருந்தவர் 2013 ஆம் ஆண்டு நிரந்தரமாகச் சென்னையில் குடியேறினார். சென்னை வந்தப் பிறகு, தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் சென்னையில் இருக்கும் சராசரி மக்களின் (ஆட்டோ ஓட்டுநர், பீச்சில் ரங்கராட்டினம் சுற்றுபவர், பஜ்ஜி சுடும் அம்மா) வாழ்கைகளைப் பற்றி எழுதத் துவங்கினார். இந்நிலையில் விவசாயிகளின் பிரச்சனையைப் பற்றியும் அவர்களின் தற்கொலை பற்றியும் தொடர்ந்து எழுதிவரும் சாய்நாத் அவர்கள் எழுதிய பெண் விவசாயி பற்றிய ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு அவருக்கு ஒரு ரசிகையாக மின்னஞ்சல் அனுப்பினார். விவசாயிகள் என்றாலே ஆண்கள், வயதானவர்கள் தான், அவர்கள் டிராக்டர் ஓட்டுவார்கள் என்பன போன்ற பொது சிந்தனை உள்ளபோது அதை முழுக்க முழுக்க உடைத்து பெண்கள்தான் விவசாயித்தில் 90% என சாய்நாத் எழுதியது இவருக்கு விவசாயம்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

சித்ரவேல் அடிப்படையில் ஊடகவியலாளர்..புதிய தலைமுறை செய்தி சேனலில் நம்மால் முடியும் என்ற நிகழ்ச்சியின் முன்னாள் தயாரிப்பாளர்.. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதம் ஒரு பணி செய்கிறார். நீர் நிலைகள் சீரமைத்தல், மரக் கன்றுகள் நடுதல், ஊர் சுத்தம் செய்தல் இப்படி பல கட்ட பணிகளை தன்னார்வர்களையும், மாணவர்களையும் வைத்து செய்கிறார்…இதன் மூலம் நீர் நிலைகளைப் பற்றிய ஒரு சிறிய அறிவு கிட்டுகிறது.. பிறகு 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தன் பைக் பஞ்சர் ஆகி நிற்க, அந்த ஊரில் தன் அண்ணனின் நண்பர் ஒருவர் வந்து உதவி செய்ததோடு அவர் வீட்டிற்கும் அழைத்துச் செல்கிறார்.. அந்த ஊரில் நூற்றுக்கணக்கான மக்கள் குளத்தில் நீர் கொண்டு செல்வதை கவனிக்கிறார். காஞ்சிபுரம் பக்கம் இப்போதும் குளத்தில் நீர் எடுத்து செல்கிறார்களே இவருக்கு ஆச்சரியம்… அதைப் பற்றி...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

சொந்த நில உரிமை மறுக்கப்பட்டவர்கள் பெண்கள், இரவு பகல் பாராமல் நிலத்தில் உழைத்தாலும் விவசாயி என்ற பெயர் ஆண்களுக்கே கிடைக்கிறது. இப்படிபட்ட சூழ்நிலையில் நிலமற்ற பெண்களில் நிலை சொல்லவே தேவை இல்லை. காலம் காலமாக நிலமற்ற சமூகமாக விவசாயக் கூலிகளாக பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர். அப்படி ஒரு நிலையை தங்கள் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் உழைப்பின் மூலம் மாற்றியமைத்துள்ளனர் பள்ளூர் கிராமப் பெண்கள். பள்ளூர் நிலமற்ற விவசாயப் பெண்கள் சங்கத்தில் மொத்தம் 80 பெண்கள் உள்ளனர். இவர்கள் பிரதான தொழில் கூலி வேலை மட்டுமே. இந்நிலையில் கிராமத்தில் ஆக்கிரமித்து தரிசாக இருந்த நிலத்தை TamilNadu women's Farmers Front Right என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் கண்டறிந்து பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு பெற்றுள்ளனர். காலம் காலமாக அடுத்தவர்கள் நிலத்தில் கூலியாக இருந்தப் பெண்களுக்கு தங்களுக்காக கிடைத்த...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

51 வயதான முன்னாள் இராணுவ வீரர் வெங்கடேஷ் . இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு தமிழ்நாடு அரசு பணியில் இணைகிறார், மின்சார வாரியம், திருச்சி பெல், வருவாய்த்துறை இப்படி பல துறைகளில் பணிபுரிகிறார். 2013 ஆம் ஆண்டு மதுரை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சூப்பர்வைசராக பணியில் சேர்கிறார்.. ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் நல்ல முறையில் இயங்கி வருகிறது… ஆனால் தென் தமிழகத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் சரிவர இயங்கவில்லை.. காரணம் விவசாயிகள் தங்கள் பொருட்களை கொண்டு வருவதில்லை, உடனடி பணத் தேவையின் பொருட்டு வியாபாரியிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொள்வது இப்படி நடைமுறைப் பிரச்சினைகள் இருந்துள்ளது.. இதை எல்லாம் சரி செய்ய 10 வருடங்களுக்கு முன்பே ஆட்டோ எடுத்துக் கொண்டு ஊர் ஊராக, கிராமம்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 02.02.2023

இளம் தலைமுறை பொழுதுபோக்கும் சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி நம்பிக்கையை விதைக்கிறார் சிவகாசி மாவட்டம் பூவாகபுரம் என்னும் சின்ன கிராமத்தில் பிறந்த தினேஷ்குமார். வேளாண்மையை வெற்றிகரமாக செய்யும் விவசாயிகளையும் தொழில்நுட்பங்களையும் 'நவீன உழவன்' என்ற யூடியூப் சேனல் மூலம் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லும் இந்த எம்பிஏ பட்டதாரி, ஒரு தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்கிறார். தன் பயணங்களில் கண்டறியும் வித்தியாசமான விவசாயிகளையும் வியப்பான தொழில்நுட்பங்களையும், பொதுவெளிக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் ஒரு முகநூல் பக்கத்தைத்தொடங்கியதில் தொடங்குகிறது இவரது வெற்றிப்பயணம். தன் உற்பத்தியை தானே மதிப்பூட்டி கூடுதல் லாபம் பார்க்கும் விவசாயிகள், ஒருங்கிணைந்த வேளாண்மை மூலம் பெரும் லாபம் ஈட்டும் விவசாயிகள், புதுப்புது தொழில்நுட்பங்களைக் கையாளும் விவசாயிகள், மாறுபட்ட பயிர்களை பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளென சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கும் விவசாயப்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 02.02.2023

புதுவையின் ஏம்பலம் கிராமத்தில் வசிக்கும் இந்த 25 வயது இளைஞன், கைவிட்டுப்போன ஐநூறுக்கும் மேற்பட்ட மண் சார்ந்த மரபு விதைகளை மீட்டெடுத்து மீண்டும் நம் நிலங்களில் உயிர்ப்பித்திருக்கிறார். விஷூவல் கம்யூனிகேஷன் படித்த சுந்தர், ஓர் ஆவணப்படத்துக்காக தொடங்கிய தேடல், நம்மாழ்வாரிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. அந்த சந்திப்புதான் சுந்தரின் பாதையை இயற்கையின் பக்கம் திருப்பியது. விதையை முன்வைத்து நடக்கும் வேளாண் அரசியலையும் நம் பாரம்பர்ய விதைகளின் தனித்தன்மைகளையும் நம்மாழ்வார் விவரிக்க, நஞ்சில்லா விவசாயம் செய்ய முடிவெடுத்தார் சுந்தர். ஆனால் அதற்குப் போதுமான நிலமில்லை. தன் வீட்டையொட்டியிருக்கும் சின்ன இடத்தில், காய்கறிகளைப் பயிரிட நினைத்த சுந்தருக்குக் கிடைத்தவையெல்லாம் வீரியரக விதைகள். மரபு விதைகளுக்கான அவரது பயணம் அப்போதுதான் தொடங்கியது. தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து 30 மரபு...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 02.02.2023

கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாய கூட்டுறவு குழு - சிறந்த வேளாண் கூட்டுறவு அமைப்பு. விவசாயம் லாபம் தரும் தொழிலல்ல என்ற கற்பிதம்தான் இளைய தலைமுறையை விளைநிலங்களை விட்டு விலக வைக்கிறது. திட்டமிட்ட உழைப்பும் தொழில்நுட்ப அறிவும் இருந்தால் வேளாண்மையிலும் லட்சங்களை ஈட்டலாம் என்ற நம்பிக்கையை தங்கள் செயல்வழி விதைக்கிறார்கள் அத்திவாக்கத்தை சேர்ந்த இந்தப் பெண்கள். 2015 ஆம் ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்துக்கு அருகிலிருக்கும் கீழ் அத்திவாக்கத்தை சேர்ந்த 15 பெண்களை ஒருங்கிணைத்து 'கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாயக் கூட்டுறவுக் குழு' என்ற சிறு அமைப்பொன்றை உருவாக்கியது Human Resource Development Foundation என்ற அமைப்பு. சாதி, மத பேதங்களை கடந்து, வேளாண்குடியாக கரம்கோர்த்து ஒரு தரிசு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யத் தொடங்கியது இந்தக்குழு. ஒருபோகம் மட்டுமே விளைச்சல் தந்த...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 01.02.2023

திருமிகு. வானகம் ரமேஷ் - சிறந்த வேளாண் பங்களிப்புயில் சிறந்த பங்களிப்பு தமிழ்நாட்டின் மத்தியில் இயற்கை வேளாண் சார்ந்த பயிற்சிகளுக்காகவும் பரிசோதனைக்காகவும் ஒரு மாபெரும் பண்ணையை உருவாக்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் சிந்தனையின் மூலம் 2009 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் கடவூரில் உருவாக்கப்பட்டது வானகம்.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசாக, கருங்கல் பாறைகள் பொதிந்து கால்நடைகள் மேய்க்ககூட பயன்படாத கட்டுத்தரையாக கிடந்த அந்த நிலத்தை சீர்படுத்தி குளங்கள் வெட்டி, நெல், வாழை, மஞ்சள், காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், வெங்காயம். மரவள்ளி கிழங்கு என முப்போகம் விளையும் பூமியாகவும் பசுமை போர்த்திய வனமாகவும் காட்சியளிக்க பெரும் பங்காற்றியுள்ளவர் வானகம் ரமேஷ்.. வானகத்தின் முதல் தன்னார்வலராக தன்னை இணைத்துக் கொண்டவர் இன்று அறங்காவலர், பொருளாளர் என வானகத்தின் செயல்திட்டங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்புகளை கவனித்து...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 01.02.2023

திருமிகு.வெற்றிவேல், உழவர் பூமி  - கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த வெற்றிவேல், ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தில் இருந்து மேலெழுந்து வந்தவர். பள்ளிக்காலத்திலேயே அப்பாவை இழந்து, பெரும்  வறுமையில் கூலி வேலை செய்த  அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர். காலை கல்லூரி   இரவு முழுவதும் கிடைத்த வேலைகள் என  கடும் சிரமங்களுக்கு மத்தியில்  பட்டப்படிப்பு முடித்து ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இணைந்த வெற்றிவேலை,  நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புத்தரும் ஒரு பசுமைத் தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது காலம். படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் பொருளீட்ட வேண்டும் என்ற கனவோடு இருந்தவரின் வாழ்க்கையை மாற்றியது, 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தன் வெளிநாட்டு கனவை கைவிட்டு இம்மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் தன்...