Admin
-1
archive,author,author-uvan-kartusr,author-1,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 02.02.2023

இளம் தலைமுறை பொழுதுபோக்கும் சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி நம்பிக்கையை விதைக்கிறார் சிவகாசி மாவட்டம் பூவாகபுரம் என்னும் சின்ன கிராமத்தில் பிறந்த தினேஷ்குமார். வேளாண்மையை வெற்றிகரமாக செய்யும் விவசாயிகளையும் தொழில்நுட்பங்களையும் 'நவீன உழவன்' என்ற யூடியூப் சேனல் மூலம் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லும் இந்த எம்பிஏ பட்டதாரி, ஒரு தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்கிறார். தன் பயணங்களில் கண்டறியும் வித்தியாசமான விவசாயிகளையும் வியப்பான தொழில்நுட்பங்களையும், பொதுவெளிக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் ஒரு முகநூல் பக்கத்தைத்தொடங்கியதில் தொடங்குகிறது இவரது வெற்றிப்பயணம். தன் உற்பத்தியை தானே மதிப்பூட்டி கூடுதல் லாபம் பார்க்கும் விவசாயிகள், ஒருங்கிணைந்த வேளாண்மை மூலம் பெரும் லாபம் ஈட்டும் விவசாயிகள், புதுப்புது தொழில்நுட்பங்களைக் கையாளும் விவசாயிகள், மாறுபட்ட பயிர்களை பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளென சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கும் விவசாயப்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 02.02.2023

புதுவையின் ஏம்பலம் கிராமத்தில் வசிக்கும் இந்த 25 வயது இளைஞன், கைவிட்டுப்போன ஐநூறுக்கும் மேற்பட்ட மண் சார்ந்த மரபு விதைகளை மீட்டெடுத்து மீண்டும் நம் நிலங்களில் உயிர்ப்பித்திருக்கிறார். விஷூவல் கம்யூனிகேஷன் படித்த சுந்தர், ஓர் ஆவணப்படத்துக்காக தொடங்கிய தேடல், நம்மாழ்வாரிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. அந்த சந்திப்புதான் சுந்தரின் பாதையை இயற்கையின் பக்கம் திருப்பியது. விதையை முன்வைத்து நடக்கும் வேளாண் அரசியலையும் நம் பாரம்பர்ய விதைகளின் தனித்தன்மைகளையும் நம்மாழ்வார் விவரிக்க, நஞ்சில்லா விவசாயம் செய்ய முடிவெடுத்தார் சுந்தர். ஆனால் அதற்குப் போதுமான நிலமில்லை. தன் வீட்டையொட்டியிருக்கும் சின்ன இடத்தில், காய்கறிகளைப் பயிரிட நினைத்த சுந்தருக்குக் கிடைத்தவையெல்லாம் வீரியரக விதைகள். மரபு விதைகளுக்கான அவரது பயணம் அப்போதுதான் தொடங்கியது. தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து 30 மரபு...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 02.02.2023

கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாய கூட்டுறவு குழு - சிறந்த வேளாண் கூட்டுறவு அமைப்பு. விவசாயம் லாபம் தரும் தொழிலல்ல என்ற கற்பிதம்தான் இளைய தலைமுறையை விளைநிலங்களை விட்டு விலக வைக்கிறது. திட்டமிட்ட உழைப்பும் தொழில்நுட்ப அறிவும் இருந்தால் வேளாண்மையிலும் லட்சங்களை ஈட்டலாம் என்ற நம்பிக்கையை தங்கள் செயல்வழி விதைக்கிறார்கள் அத்திவாக்கத்தை சேர்ந்த இந்தப் பெண்கள். 2015 ஆம் ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்துக்கு அருகிலிருக்கும் கீழ் அத்திவாக்கத்தை சேர்ந்த 15 பெண்களை ஒருங்கிணைத்து 'கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாயக் கூட்டுறவுக் குழு' என்ற சிறு அமைப்பொன்றை உருவாக்கியது Human Resource Development Foundation என்ற அமைப்பு. சாதி, மத பேதங்களை கடந்து, வேளாண்குடியாக கரம்கோர்த்து ஒரு தரிசு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யத் தொடங்கியது இந்தக்குழு. ஒருபோகம் மட்டுமே விளைச்சல் தந்த...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 01.02.2023

திருமிகு. வானகம் ரமேஷ் - சிறந்த வேளாண் பங்களிப்புயில் சிறந்த பங்களிப்பு தமிழ்நாட்டின் மத்தியில் இயற்கை வேளாண் சார்ந்த பயிற்சிகளுக்காகவும் பரிசோதனைக்காகவும் ஒரு மாபெரும் பண்ணையை உருவாக்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் சிந்தனையின் மூலம் 2009 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் கடவூரில் உருவாக்கப்பட்டது வானகம்.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசாக, கருங்கல் பாறைகள் பொதிந்து கால்நடைகள் மேய்க்ககூட பயன்படாத கட்டுத்தரையாக கிடந்த அந்த நிலத்தை சீர்படுத்தி குளங்கள் வெட்டி, நெல், வாழை, மஞ்சள், காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், வெங்காயம். மரவள்ளி கிழங்கு என முப்போகம் விளையும் பூமியாகவும் பசுமை போர்த்திய வனமாகவும் காட்சியளிக்க பெரும் பங்காற்றியுள்ளவர் வானகம் ரமேஷ்.. வானகத்தின் முதல் தன்னார்வலராக தன்னை இணைத்துக் கொண்டவர் இன்று அறங்காவலர், பொருளாளர் என வானகத்தின் செயல்திட்டங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்புகளை கவனித்து...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 01.02.2023

திருமிகு.வெற்றிவேல், உழவர் பூமி  - கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த வெற்றிவேல், ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தில் இருந்து மேலெழுந்து வந்தவர். பள்ளிக்காலத்திலேயே அப்பாவை இழந்து, பெரும்  வறுமையில் கூலி வேலை செய்த  அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர். காலை கல்லூரி   இரவு முழுவதும் கிடைத்த வேலைகள் என  கடும் சிரமங்களுக்கு மத்தியில்  பட்டப்படிப்பு முடித்து ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இணைந்த வெற்றிவேலை,  நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புத்தரும் ஒரு பசுமைத் தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது காலம். படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் பொருளீட்ட வேண்டும் என்ற கனவோடு இருந்தவரின் வாழ்க்கையை மாற்றியது, 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தன் வெளிநாட்டு கனவை கைவிட்டு இம்மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் தன்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

நம் அனுமன் நதி  சீரமைப்பு குழு - நீர் நிலைகளை மீட்டெடுத்தல் 30 ஆண்டுகாலம் தண்ணீரையே பார்க்காத ஒரு நதியை மீட்டு உயிர் தந்திருக்கிறது மக்களின் ஒற்றுமை. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி  32 கிலோ மீட்டர் நீளத்துக்கு 11 கிராமங்களின் உயிர் நனைத்து ஒடி  மன்னார் வளைகுடாவில் கலக்கிறது அனுமன் நதி.  இருதிசைகளிலும் 400 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் மூழ்கி சுருங்கி பொழிவிழந்து போனது இந்த நதி. மரணித்து வரும் நதியை மீட்க  ஜாதி, மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு கரம் கோர்த்தார்கள் 11 கிராமங்களின் தன்னார்வலர்கள். கொரோனாவினால் ஊரே முடங்கிக் கிடந்த நேரத்தில் தொடங்கியது பணி. அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர். சக்திநாதன் வழிகாட்ட,  மாவட்ட நிர்வாகம் தோள் கொடுக்க இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள். DGPS...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

சரோஜா- சிறந்த பெண் விவசாயி விவசாயி என்பது ஆண்பாலைக் குறிக்கும் சொல்லாடலாகவே தமிழகத்தில் இருந்து வருகிறது. அந்த கற்பிதத்தை மாற்றி எழுதியிருக்கிறார் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 53 வயதான   சரோஜா. தான் மட்டுமின்றி தன்னைச்சுற்றியிருக்கும் விவசாயிகளையும் கைபிடித்து தூக்கி நிறுத்தியதில் தனித்துவம் பெறுகிறார் சரோஜா. அம்மா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என பல உறவுகளை புற்றுநோய் பாதித்து உயிர் பறிக்க மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளான சரோஜா, அதற்கான காரணங்களை அலசத் தொடங்கியிருக்கிறார். உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே புற்றுநோய் பரவலுக்கு முக்கியக்காரணம் என்பதை உணர்ந்து  அதற்கு மாற்று குறித்து சிந்தித்த சரோஜாவுக்கு நம்மாழ்வாரின் புத்தகங்கள் தீர்வுக்கான பாதையைக் காட்டின. மகன்களோடு சென்று நம்மாழ்வாரைச் சந்தித்து நஞ்சில்லா உணவு குறித்து கற்றரிந்து வந்து சொந்த ஊரில் வேளாண்மை செய்யத் தொடங்கினார் சரோஜா. வேளாண்மை...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

சிருஷ்டி பவுண்டேஷன் - வேளாண் சிறப்பு விருது மன வளர்ச்சி குன்றியவர்களை இந்த சமூகமும் குடும்ப அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் நிலைதான் இப்போதும் இருக்கிறது. அப்படி புறக்கணிக்கப்படுபவர்களை அரவணைத்து தோள்கொடுக்கிறார் கார்த்திகேயன். 15 ஆண்டுகளாக மன வளர்ச்சி குன்றியோர் மத்தியில் பணியாற்றியுள்ள கார்த்திக், அவர்களின் உளவியலை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறார். வேலையின்மையும் இயலாமையும் புறக்கணிப்புமே அவர்களின் கோபத்தையும் வேகத்தையும் தூண்டுகிறது என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, கார்த்திக் எடுத்த முயற்சி பெரும் மாற்றத்துக்கு விதையாகியிருக்கிறது.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகிலுள்ள குணமங்கலம் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பில் ஒரு வேளாண் பண்ணையையும் சிறப்புப் பள்ளியொன்றையும் உருவாக்கியுள்ளார் கார்த்திக். மனநலம் பாதிக்கப்பட்ட 50 பேரின் வாழ்க்கையை இந்த பண்ணையும் பள்ளியும் வண்ணமாக்கியிருக்கிறது. சிருஷ்டி பவுண்டேஷன் நடத்தும் இந்தச் சிறப்புப்பள்ளியில் வாழ்க்கைக்கல்வியோடு வேளாண் கல்வியும் போதிக்கப்படுகிறது. தங்கள் உணவுக்கு தேவையான...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

பரமேஸ்வரன்- பாரம்பரிய விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்கம் காரமடை வரி கத்தரி, குளத்தூர் வெள்ளை கத்தரி, எலவம்பாடி முள் கத்தரி என கத்தரியில் மட்டும் நம்மிடம் 500க்கும் மேற்பட்ட நாட்டுரகங்கள் இருந்துள்ளன. எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு கம்பெனி விதைகளை வாங்கி பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த அவல நிலையை மாற்றி மீண்டும் நம் பாரம்பரிய விதைகளை பரவலாக்குவதற்காக இந்தியா முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார் பரமேஸ்வரன். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள  ஐ.வாடிபட்டியைச் சேர்ந்த  பரமேஸ்வரன் கடந்த ஆறு வருட உழைப்பில் காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், மரங்கள் என  300க்கும் மேற்பட்ட  அரிய மரபு விதைகளைச் சேகரித்து பரவலாக்கியுள்ளார். நண்பரொருவர் பாரம்பரிய விதைகள் பற்றிய ஆர்வத்தைத்தூண்ட ஊர் ஊராக அலைந்து திரிந்த பரமேஸ்வரனுக்கு, சந்திரசேகரன் என்ற மூத்த விவசாயி 20 விதமான பாரம்பரிய விதைகளை அள்ளித்தந்திருக்கிறார். அதன்பிறகு, அதுவே பரமேஸ்வரனின் வாழ்க்கையாகிப்போனது....

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

நம் சந்தை - சிறந்த வேளாண் கூட்டுறவு பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கோத்தகிரி சண்முகநாதன்  உருவாக்கியுள்ள நம்ம ஊரு சந்தை தேசத்துக்கே முன்னுதாரணமாகியிருக்கிறது. மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்து இருளர்கள் சேகரித்துவரும் தேனையும், இரவு பகல் பாராமல் குறும்பர்கள் வரைந்துதரும் ஓவியங்களையும் மலிவாக வாங்கி கொள்ளை விலைக்கு விற்று பணம் பார்த்தார்கள் பலர். இதைக்கண்டு வருந்திய  சண்முகநாதன் இரண்டாண்டுகள் அந்த மக்களோடு பழகி அவர்கள் சேகரித்துத்தரும் பொருள்களின் மகத்துவத்தை உணர வைத்தார். அந்த மக்களே விலைவைத்து விற்கும் வகையில் 'நம்ம ஊரு சந்தை' என்ற சொசைட்டியை உருவாக்கினார்.  குறும்பர், கோத்தர், இருளர், ஆதிதிராவிடர்கள் மற்றும் நில உடமை மறுக்கப்பட்ட தாயகம் திரும்பியவர்கள் நம்ம ஊரு சந்தையின் அங்கத்தினராக்கப்பட்டார்கள். இசைக்கருவிகள், ஓவியங்களென உற்பத்திக்கும் விற்பனைக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து வரையறுக்கப்பட்ட நிறுவனம் போல செயல்படுகிறது...