வேர்கள்
ஆற்றங்கரையில் பிறந்த மனித நாகரிகம். . ஏரியையும் குளங்களையும் வெட்டி நீரை சேமித்து வளரத்தொடங்கியது. ஆனால் காலப்போக்கில் நீர்ப்பிடிப்பு பகுதியாய் அறியப்பட்ட ஏரி குளங்கள் பலவும் நகர்மயமாதலின் அசுர வளர்ச்சியில் சிக்குண்டு காணாமல் போயின, எஞ்சியவை கழிவு நீர் குளங்களாகவும், கேட்பாரற்ற குப்பை மேடுகளாவும் மாறிப்போயின. மரங்களுக்கு வேர்களை போல ஏரி குளங்களுக்கு நீர்வழிப்பாதை. நீர்வழிப்பாதையை இழந்த ஏரி குளங்கள் பட்டுப்போன மரமாய் பயனற்றுப் போகும், அப்படி வேர்களைத் தொலைத்து தன்னை இழந்த முடிகுளம் ஏரியை தங்கள் பெரு முயற்சியால் உயிர் கொடுத்து மீட்டுள்ளனர் திருப்பூரின் வேர்கள் அமைப்பினர். 2010 இல் சுற்றுச்சூழலைக் காக்க இளைஞர்கள் இணைந்து உருவாக்கியது தான் வேர்கள் அமைப்பு. . திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் மரங்கள் நடுவது. . சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உண்டாக்குவதே அவர்களின் ஆரம்பகட்ட செயல்பாடு.. 30 வருடங்களுக்கு முன் திருப்பூரின்...